அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Wednesday, August 13, 2008

நம்பினார் கெடுவார்.....

காங்கிரஸை நம்பி கருணாநிதி எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

திருச்சியில் அவர் பேசியதாவது:மத்தியில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே, குறைந்தபட்ச வேலை திட்டம், மதவாதத்தை ஒழிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, ஊழலை ஒழிப்பது ஆகிய காரணங்களை முன் வைத்துத் தான். ஆனால் இவற்றை எல்லாம் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டுவிட்டது.


[நல்லகண்ணுவே, நல்ல கண்ணோடு பார்.


காங்கிரஸோடு, திமுகவும் எல்லாவற்றையும் சேர்த்து மானத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது]


மொத்தத்தில் உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பினோம், ஆதலால் கெட்டோம்...









No comments: