அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, February 26, 2009

நடிப்பு - ஒரு துறை சார்ந்தது அல்ல



செய்தி - 1: முதல்வர் கருணாநிதி மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு உடன்பட்டு உண்ணாவிரத முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது கோரிக்கையை அவர் ஏற்கவில்லை என்றால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
விளக்கம்: உண்ணாவிரதம் என்பது தற்போது ஒரு நாகரீகச் சொல் ஆகி விட்டது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் (முக்கியமாக மக்களை) ஏமாற்ற உதவும் சொல்லாகி விட்டது.

செய்தி - 2: தமிழக அரசின் வரி வருவாய் தேவையற்றபடி ஆடம்பரமாக செலவழிக்கப்படுகிறது. சரியான திட்டங்களுக்காக அது பயன்படுத்தப்படவில்லை.
- எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

விளக்கம்: நமது கழக ஆட்சியில் தவறாக பயன்படுத்தப் படாமல், மிகச்சரியாக மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.ம்ம்ம்...( விட்டால் படத்தில் தெ(எ)ரியும் zero வாட்ஸ் பல்பு கூட தவறாக எறிகிறது என்பீர்கள் போல )
ஒரு சில உதாரணங்கள்:
[1] தான் செல்வதென்றால் முன்னும் பின்னும் 1000 கார்கள் வலம் வரச் செய்தது யார் என்று தெரியுமா?
[2] எந்த ஒரு அரசு விழாவானாலும் இரயிலில் செல்லாமல், தனி விமானம் மூலம் செல்வது யார் என்று தெரியுமா?
மேலும் பல..

Tuesday, February 24, 2009

சோனியாவின் முடிவு

இலங்கை விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதால் தமிழகத்தில் மக்களிடையே காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கும் உணவு, உடை, மருந்துப் பொருட்களை அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களைத் திரட்டுமாறு தமிழகம் உள்ளிட்ட தென் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.இந்தப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கும் சோனியா உத்தரவிட்டுள்ளார்.போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், இப்போது திடீரென நிவாரணப் பொருட்களை அனுப்புவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------
அர்ஜூன்: ஏட்டையா நான் போய் டிஞ்சர் வாங்கிட்டு வரேன்..
வடிவேலு:மூஞ்ச பஞ்சர் ஆக்கிட்டு டிஞ்சரா, ஏன் இந்த கொலைவெறி?
அர்ஜூன்:போங்க ஏட்டையா, உங்க மூக்கு பிஞ்சு மூக்கு...
சத்தியமா மேல உள்ள செய்திக்கும் இந்த ஜோக்கும் சம்பந்தமில்லை...
-----------------------------------------------------------------------

Monday, February 23, 2009

என்ன நினைச்ச, நீ என்ன நினைச்ச - சொக்கத்தங்கம்


நேற்று வரையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு இல்லை; உறவு இல்லை என்று கூறிக் கொண்டிருந்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏமாற்றி விட்டு, திருமண விழாவில், "நானும் காங்கிரசும் கூட்டுச் சேரப் போகிறோம்' என்று நாட்டை ஏமாற்றுகின்ற அரசியல் நாட்டியம் எனக்குத் தெரியாது.சோனியா காந்தி என்ற அந்தச் சொக்கத் தங்கத்தை, பதி பக்தி இல்லாதவர்' என்று சொன்னவர் யார் என்று எனக்கும் தெரியும். நாட்டுக்கும் தெரியும்.பதி பக்தியைப் பற்றி அவ்வாறு பேசியவர், எம்ஜிஆரைப் பற்றி ராஜீவ் காந்திக்கு கைப்பட என்ன கடிதம் எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும்.இப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி, கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்! கடமை தவறாத நண்பர் வீரப்ப மொய்லி(ஐயோ,ஐயோ,வயிறு வலிக்குது, தாங்க முடியலடா சாமி)-இவருக்கு அளித்த மறுப்பு, தமிழ்நாட்டு காங்கிரஸ் நண்பர்களே, எண்ணிப் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!.சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், உண்மை எது? உண்மை அற்றது எது? திட்டமிட்டது எது? திட்டமிடாமல் நடந்தது எது? கலகத்துக்குக் காரணம் வழக்கறிஞர்களா? அல்லது காவல் துறையினரா?.அல்லது இந்த விபரீத நிகழ்ச்சிக்குக் காரணமான வீசப்பட்ட முட்டைகள், அழுகிய முட்டைகளா? என்ற விவரங்கள் எல்லாம் சி.பி.ஐ. விசாரணை மூலம் விரைவாகத் தெரிந்து விடும்.இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும்போது, நானும், தமிழகத்தில் அமைதியோடு வாழ்கிற மக்களும் சி.பி.ஐ. விசாரணையின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இதைத் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சியினரும், எல்லா கட்சித் தலைவர்களும், இதை தொடர்கதையாக ஆக்குவதற்கு இடம் தராமல் முடிந்து போன சோக நிகழ்ச்சி என்ற அளவில் இப்போதுநடந்து கொண்டிருக்கின்ற நல்லாட்சி தொடர உதவி வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

A(ஆஸ்கார்).R(ரெண்டு).ரஹ்மான்


தமிழர்களின் பெருமையை திக்கெட்டும் வெற்றி முரசு கொட்ட வைத்த தமிழன் ஆஸ்கார் நாயகன்......

Wednesday, February 4, 2009

மீண்டு(ம்) வந்தவன்....

அனைவரும் நலமா?
வெகு நாட்களுக்குப் பிறகு, பூ(வலைப்பூ) வுலகத்திற்கு மீண்டு(ம்) வந்திருக்கிறேன்.
இனி,
நீங்கள் தினமும் எனது UPDATESகளை காணலாம்.....