அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Saturday, November 21, 2009

வழக்கு சாமியோ வழக்கு


சென்னையில் சுப்பிரமணியசாமி பேட்டி: கூடிய விரைவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு செய்யப் போகிறேன். பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் இதில் நடவடிக்கை எடுக்கா விட்டால் அவர் மீதும் வழக்கு போடுவேன்.
(நல்ல வேளை இந்த செய்தியை போடாத பத்திரிகைகள் மீது வழக்கு தொடருவேன் என்று சொல்லவில்லை)

இதற்கு என்ன நடக்கும் என்று ஒரு சிறிய கற்பனை!!!

(டில்லியில் ....)

கேள்வி: உங்கள் மீது வழக்கு தொடர்வேன் என்று கூறியிருக்கிறாரே சு.சாமி?
ராசா: யார் அவர்? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் (தலைவருக்கு அப்படியே SMS அனுப்புகிறார்)


(சென்னையில்...)

கருணாநிதி: பார்த்தாயா தமிழா, தாழ்த்தப்பட்ட சகோதரன் கஷ்டப்படுகிறான்! என்ன செய்யப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? பார்ப்பனர்களின் இராஜ்ஜியம் இன்னும் இருக்கிறது? நாம் இன்னும் இதே நிலையில்தான் இருக்கிறோமா?

அதே சென்னையில்

வீரமணி:(வீரம்?) தாழ்த்தப்பட்டவர் மீது வழக்கு தொடர்ந்த பார்ப்பனர் மீது திக சார்பில் வழக்கு தொடரப்படும்.


தமிழ்நாட்டில்..
மக்கள்: மானாட மயிலாடவில் நமிதா போட்டிருந்த டிரஸ் நல்லாயிருந்ததுல்ல..

No comments: