
விளக்கம்:ஆமாம், அவரையும் மறந்து விட்டோம், அவரது கொள்கைகளையும் தான் நாமே ஏலம் விட்டு விட்டோமே, அவர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டால் என்ன? விடாட்டால் என்ன? நல்லவேளை இதையெல்லாம் பார்க்க மகாத்மா இல்லை. அவர் மட்டும் இருந்திருந்தால், " காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன,புத்தம் புதிய கவர்ச்சித் திரைப்படம்" என அறிவித்து அவரையும், அவரது கொள்கைகளையும் கேவலப்படுத்துவதைப் பார்த்தே நொந்து இருப்பார்.