அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, February 26, 2009

நடிப்பு - ஒரு துறை சார்ந்தது அல்ல



செய்தி - 1: முதல்வர் கருணாநிதி மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு உடன்பட்டு உண்ணாவிரத முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது கோரிக்கையை அவர் ஏற்கவில்லை என்றால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
விளக்கம்: உண்ணாவிரதம் என்பது தற்போது ஒரு நாகரீகச் சொல் ஆகி விட்டது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் (முக்கியமாக மக்களை) ஏமாற்ற உதவும் சொல்லாகி விட்டது.

செய்தி - 2: தமிழக அரசின் வரி வருவாய் தேவையற்றபடி ஆடம்பரமாக செலவழிக்கப்படுகிறது. சரியான திட்டங்களுக்காக அது பயன்படுத்தப்படவில்லை.
- எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

விளக்கம்: நமது கழக ஆட்சியில் தவறாக பயன்படுத்தப் படாமல், மிகச்சரியாக மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.ம்ம்ம்...( விட்டால் படத்தில் தெ(எ)ரியும் zero வாட்ஸ் பல்பு கூட தவறாக எறிகிறது என்பீர்கள் போல )
ஒரு சில உதாரணங்கள்:
[1] தான் செல்வதென்றால் முன்னும் பின்னும் 1000 கார்கள் வலம் வரச் செய்தது யார் என்று தெரியுமா?
[2] எந்த ஒரு அரசு விழாவானாலும் இரயிலில் செல்லாமல், தனி விமானம் மூலம் செல்வது யார் என்று தெரியுமா?
மேலும் பல..

No comments: